பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 நிவாரணம் பெறுதல் சாத்தியமாகும். இ ன் னு ம் எத்தனையோ விஷயங்களிருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் ஒருமணி நேரத்திற்குள் முற்றிலும் பேசிவிடுதல் சாத்தியமில்லை. எனது விவகாரங்களிலே ஏதேனும் தெளி வில்லாத விஷயத்தில் வந்து உங்களுடைய சந்தேகங்களை நிவிருத்தி செய்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் ஆக்ஷேபத்திற்கெல்லாம் மறுமொழி கூறச் சித்தமாயிருக் கின்ருேம். உங்களுடைய சந்தேகங்களை எல்லாம் நிவிருத்தி செய்து நாங்கள் சொல்வதனைத்தையும் நிரூபணம் செய்யக் காத்திருக்கின்ருேம். எங்களுடைய முயற்சிக்கு உங்களது சகாயம் அவசியமாக வேண்டும். உங்கள் துணையில்லாத பrத்தில் நாங்கள் தனியாக ஒன்றும் நிறைவேற்றிடமுடியாது. இந்த விவகாரத்தைப் பற்றி தீர்க்காலோசனை செய்து, இதன் நிலைமையை நன்ருய் ஆராய்ந்தறிந்துகொண்டு, அதற்கு அப்பால் எங்களுக்கு ச காயம் செய்துவர வேண்டுமென்று உங்களைக் கெஞ்சி பிரார்த்தனை செய்து கொள்ளுகிருேம். நமது தேசம் நல்ல நிலைமைக்கு வரவேண்டுமென்ற முயற்சியிலே நாமெல்லோரும் ஒத்து வேலை செய்வோமாக. வந்தே மாதரம்.