இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* வீமன் கூறிய வார்த்தைகள்
(இவை மகாகவி பாரதிக்கே உரியனவாகும்)
‘'சூதர் மனைகளிலே-அண்னே! தொண்டு மகளிருண்டு
சூதில் பனயமென்றே - அங்கோரி
தொண்டச்சி போவதில்லை.
‘ஏது கருதி வைத்தாய்? அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்...? -
மாதர் குலவிளக்கை-அன்பே
வாய்ந்த வடிவழகை
‘பூமியரசரெல்லாம் - கண்டே
போற்ற விளங்குகிறாள்
சாமி புகழினுக்கே வெம் போர்ச்
சண்டனப் பாஞ்சாலன்
‘அவன் சுடர் மகளை- அண்ணே
ஆடியிழந்து விட்டாய்
தவறு செய்து விட்டாய்- அண்ணே
தருமங்கொன்று விட்டாய்
‘சோரதிற்கொண்டதில்லை. அண்னே
சூதிற்படைத்த தில்லை
வீரத்தினாற் படைத்தோம்- வெப்போர் வெற்ற
வெற்றயினாற் படைத்தோம்
‘சக்கரவர்த்தி யென்றே - மேலோந்
43