பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை கணித சாஸ்திரங்களும் இயற்கை நூல்களும் பாரத நாட்டிலேதான் பிறந்து பின்னர் உலகத்தில் பரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது லயின்ஸ் பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம். காலக்கிரமத்தில் தலைமை பெறுவோம்.

இனி மேல் கதையைச் சுருக்கிவிட வேண்டும். வருங்காலத்தில் உலகத்துக்குப் பாரதம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால் இந்நாடு லோக குரு ஆகும்? உலகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கப் போவது கர்ம யோகம். கடமையைச் செய்வது, தவறாத படி செய்து இன்பத்தோடு இருக்கும் வழி எப்படி யோகமே வழி யோகமாவது செய்கை, திறமை’ என்று பகவான் கீதையிலே சொல்லுகிறார். பூமண்டலத்துக்கு யோகம் நாட்டுவோம்.

ஜனங்களே ‘உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபை கூட்டும்படி இரைச்சல் போடுங்கள் அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்று கூறி முடிக்கிறார் மகாகவி.

பெண் விடுதலை

பெண் விடுதலை, பெண் கல்வி, பெண் சமத்துவம் பற்றியெல்லாம் மகாகவி பாரதியார் பல சிறந்த கவிதைகளை வெளியிட்டுள்ளது போலவே சிறந்த பல நல்ல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

அவைகளைப் படித்தால் வேறு பல சிறந்த பல உண்மைகளும் செய்திகளும் கிடைக்கும்.

“இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு பெண் கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்கள் என்று தமிழ்நாட்டில் பலர் கூறினர். இப்போதே பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. அண்டச்சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரைகூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால் இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால் ஏழு லோகமும் கட்டாயம் இடிந்து பூமியின் மேல் விழும் என்றும் வால் நட்சத்திர வகையறாக்களெல்லாம் நடுவிலே அகப்பட்டுத் துவையலாய்விடும் என்று பலர் நடுங்குகிறார்கள்.

‘மதராஸ் மெயில் போன்ற ஆங்கிலேயப் பத்ராதிபரிடம் போய் இந்தியாவிற்கு சுய ராஜ்யம் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள், “ஒஹோ, ஹோ, ஹோ, இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தால் பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு ராஜபுத்திரர்கள் மகாராஷ்டிரர்களின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள். அப்பால் மகாராஷ்டிரர் தெலுங்கரையும், கன்னடரையும், மலையாளிகளையும் தின்று விடுவார்கள். பிறகு மலையாளிகள் தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும் சூர்ணயமாக்கிவிடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்களிகளின் எலும்புகளை மாலையாகப் புனைவர் என்று சொல்லி

63