பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழா! உன் வேலைகள் அனைத்திலும் பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீதுக் கொள்கைகள் வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடம் கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலம் எதிலும் எப்போதும் நேர்மையிருக்ணக வேண்டும்; உண்மையிருக்க வேண்டும் நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது பிறகும் உன்னை வஞ்சிக்கலாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.

உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்ககெல்லாம் வேர் உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்.

தமிழா எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரம் தான் மெய். பிந்திய சாஸ்திரம் பொய்’ என்று தீர்மானம் செய்து கொள்ளாதே காலத்துக்கும் உண்மைக்கும் எதிரடையாக ஒரு கணக்கு ஏறுப்பட்டிருக்கிறதா. தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி, மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள்’ என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இவற்றுள் அற மாவது தி ட பட் , அது உனக்கும் உனது சுற்றுப்புறத்தாருக்கும், பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. பிறர் என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன்தருமிடத்து அறங்களாகும்.

பொரும் என்பது செல்வம். நிலமும் பொன்னும் கலையும், புகழும் நிறைந்திருத்தல். நல்ல மக்களைப் பெறுதல் இனப் பெருமை சேருதல். இவையெல்லம் செல்வம் இச்செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.

இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண் பாட்டு கூத்து முதலிய ரஸ் வஸ்துக்களை அனுபவிப்பது. இவ்விண்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்கள் எல்லாம் தீர்க. உனது வறுமை எதாலைக. உனக்கு இனிமையும் அழகு முடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக!

வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது ‘வீடு’ என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். மேற்கூறப்பட்ட மூன்று

82