பக்கம்:மதன கல்யாணி-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மதன கல்யாணி

கூடும் என்ற சந்தேகமும், தான் அப்போது என்ன செய்வது என்ற சிந்தனையும் எழுந்து மைனரை வதைக்க ஆரம்பித்தன. அவளது இடையைச் சுற்றி அணைத்துக் கொண்டிருந்த அவரது கரங்கள் வெடவெட என்று நடுங்கின; மிகவும் யெளவனப் பருவத்தின ளாகக் காணப்பட்டவளும், இன்னாள் என்பது தெரியாதவளுமான ஒர் அன்னிய மங்கையைத் தான் கட்டி அனைத்துக் கொண்டிருந் தது அவனுக்குச் சுகத்தையும், கரைகடந்த சஞ்சலத்தையும் உண்டாக்கியது. அப்படிப்பட்ட பரமசங்கடமான நிலைமையில் மைனர் இரண்டொரு நிமிஷம் இருக்க, அவனது தத்தளிப்பையும், தான் பெண் என்று அவன் அறிந்து கொண்டான் என்பதையும் சுலபத்தில் யூகித்துக் கொண்ட அந்த வேஷதாரி ஸ்திரீ அவன் சந்தேகப்படாதபடி, தனது இடது கையில் கடிவாள வாரைப் பிடித்துக் கொண்டு, பின்புறம் சடக்கென்று திரும்பி, வலக்கரத்தை மைனரது காலின் கீழ் கொடுத்து மிகவும் பலமாக அடியோடு துக்கி இடப்புறத்தில் தள்ளிவிட, அதை எதிர்பாராத மைனர் பொறித்தட்டும் நேரத்தில் ஒரு குழந்தை போய் விழுவது போல குதிரையில் இருந்து படேரென்று கீழே பாட்டையின் மேல் விழுந்தான். உடனே, அந்த வேஷதாரி இன்ஸ்பெக்டர் தனது குதிரையைப் பிடித்து சடக்கென்று நிறுத்திவிட்டு, குதிரையின் சேனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிஸ்டல் என்னும் ஒரு கைத் துப்பாக்கியைப் எடுத்துத் தனது வலக்கரத்தில் பிடித்துக் கொண்டாள். கீழே வீழ்ந்த மைனர் கரைகடந்த திகிலையும் அச்சத்தையும் அவமானத்தையும் அடைந்தவனாய் தனது தேகத்தில் பட்ட அடியையும் இலட்சியம் செய்யாமல், தனக்கு அவள் இன்னமும் என்ன துன்பம் செய்வாளோ என்ற கவலையும் ஆவலும் கொண்டவனாய் விரைவாக எழுந்து நின்றான். அந்த ஒரு நிமிஷ நேரமும் அவனுக்குச் சகிக்க ஒண்ணாத நரக வேதனையாக இருந்தது. அந்தச் சமயத்தில் அந்தப் பெண் தனக்கெதிரில் கைத்துப்பாக்கியை நீட்டி, தன்னைச் சுட்டுவிட ஆயத்தமாக இருந்ததைக் காணவே, அவனுக்குக் குலைநடுக்கம் எடுத்தது. கைகால் தடதட என்று ஆடின உச்சி முதல் உள்ளங் கால் வரையிலும் குபிரென்று வியர்வை பொங்கி வெள்ளம் போல வழிந்தது. அடுத்த நிமிஷத்தில் அந்த வேஷதாரிப் பெண் அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/96&oldid=650030" இலிருந்து மீள்விக்கப்பட்டது