3
3 பா.போ போய் வெளியே இருந்துகொண்டு எங்களுக்குத் தெரிவி.
அ.அப்படியே ஆவட்டும் அம்மா. (போகிறாள்)
ச.அம்மா, இதெல்லாம் எங்கேபோய் மு டி ய ப் போகிறதோ ?
பா.எங்கே முடியப்போகிறதா ? ஏன் ? இந்த வீட்டை யாளும் அரசியாக்கப் போகிறதென்னை !
ச.அப்புறம் அப்பாகதி ? அவர் என்ன ஆவார் ?
பா.என்ன ஆவாரா? நன்றாக ஒழுங்காவார் சந்தேகமில்லாமல் புத்திசாலியாகி நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளுவார்.
ச.உங்களிஷ்டப்படி தன்னை ஆள விடுவாரோ?
பா.ஏன் கூடாது பெண்னே ? ஆயிரக்கணக்கான அக முடையார்கள் (ஆம்படையான்கள்) தங்களைவிட புத்திசாலிகளான பெண் சாதிகள் தங்களை ஆளும்படி விடவில்லையா ?
ச.அம்மா, இது எனக்கு நன்றாய் அர்த்த மாகவில்லை. இப்படி ஆடவர்கள் தங்கள் பெண்சாதிகளை ஆளவிடு வது, அவர்களது புத்திசாலித் தனத்திலா, அல்லது இப்படி ஆளப்படுவதினால் அவர்கள் புத்திசாலிகளாகி றார்களா ? அவர்களுடைய புத்திசாலித்தனம் இதற்கு காரணமா, அல்லது இதன் பலனா அம்மா ?
பா.ஆம்-உனக்குக் தெரிந்தால்தானே இது காரண மும் பலனும் இரண்டும்! என்ன அதனப்பிரசங்கித் தனம் !
ச.இதுதான் உங்கள் வீட்டை நீங்கள் ஆளுகிற விதமோ அம்மா ?
பா.சந்தேகமென்ன ? வேறென்ன ? இதற்காகத் தான் ஒவ்வொரு நாட்டாரும் தங்கள் நாட்டை தாங்களே ஆளப்பார்க்கிறார்கள். நான் என் வீட்டை ஆளப் பார்க்கிறேன்!