16
16
குக்கோ,’’ என்று கூறி அதை அவள் கையில் கொடுக்கும்போது - பலவேசம் பிள்ளைக்குந் து க்கிவாரிப் போட்டது.
அவளுடைய தலையில் பெரிதாக ஒரு கட்டுப்
போடப்பட்டிருப்பதை அவர் அப்போதுதான் கவனித்தார்.
இதென்ன பூவாயி, தலையிலே கட்டு? கீழே கீழே விழுந்துட்டியா?’ என்று பரிவோடு விசாரித் தார். *
பூவாயிக்குத் துக்கம் பொத்துக் கொண்டு வத்தது. அவள் மெளனமாகக் கீழே குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.
'தயங்காமச் சும்மாச் சொல்லு பூவாயி,’’ என்று பலவேசம்பிள்ளை கூறவும் அவள் தயங்கிய படியே, இல்லீங்க... வந்து..., வந்து, நேத்திக்கு எங்க வீட்டுக்காரரு, கொஞ்சம்... கொஞ்சம்...”* -வார்த்தையை முடிக்க முடியாமல் அவள் கடு மாறினாள். உடனே பலவேசம்பிள்ளை
என்னம்மா இது பூவாயி சும்மா தைரிய மாச் சொல்லு. கொஞ்சம்... கொஞ்சம்ன்னு நிறைய வார்த்தையை மென்னு முழுங்கறியே. உன் புருஷன் பழையபடி ஆரம்பிச்சுட்டானா?” என்றார்.