47
47
முன்னே வருவதையும், அவள் பின்னால் குப்பத் துப் பெண்களே படை திரண்டு வருவதையும் ஆறுமுகம் கண்டான். அப்போது
'பாவாடை அண்ணே, நம்ம முதலாளி தன் னோடு பூவாயியை நல்லாத்தான் பாத்து முடுக்கி விட்டிருக்காரு. பாவம் ஆறுமுகத்தண்ணன்...”* என்று இருளன். ஏதோ கூறவும்... 'டேய்...”* என்று அலறிக் கொண்டு அவன் மீது பாயப் போனான் ஆறுமுகம்.
அதற்குள் அந்தப் பெண்கள் கூட்டமும், அவர்கள் கோஷமும் மிக அருகிலேயே வந்து விட்டது. எல்லோர் கவனமும் அந்தத் திசைக்குத் திரும்பியது.
'இன்னிக்கு ரெண்டிலே ஒண்னு பார்த்திட ணும். இங்கே வந்து மறியல் பண்ணப் போறாங் கனாம். எம் பெண்சாதி சொன்னது சரியாப் பூடுச்சு. எல்லாரும் புல்லா தண்ணி ஏத்திக் கிங்கடா ஆமாம். இன்னிக்குப் பலவேசத் துக்குச் சரியான பாடம் கற்பிச்சு அனுப்பணும். இவங்களுக்குக் குடுக்கற உதையிலே; அவரு ஊரை விட்டே ஓடிப் போயிடனும்’’. குடித்து விட்டு தரையில் நெளிந்து கொண்டிருந்த சடையன் புலம்பினான்.
காடையன் அந்த இடத்தில் மதுக் கடை திறந்து ஐந்து வருஷத்திற்கு மேலாகிறது. அவ