பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49

  • இன்னாத்துக்குடா இந்தப் பொட்டைங்கள் ளாம் இங்கே வந்து கூச்சல் போடறாளுவ???

தரையிலிருந்து எழுந்து நிற்க பல்முறை முயன்று கொண்டிருக்கும் சடையன் குழம்பிப் போய் கேட்டான் .

அதற்குள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே சென்ற ஆறுமுகம் தன் மனைவி எதிரில் நின்றுகொண்டு, 'ஏ கழுதே... என்னாத்துக்கு இங்கே கடை முன்னாடி வந்து நின் னுக்கிட்டுக் கூச்சல் போடறே,’ என்று அதட்டினான்.

  • கூச்சல் போடல்லே மச்சான்; கும்பிட்டுச் சொல்லறோம். குடிக்க வேணாம்; மிச்சக் காசை எடுத்துக்கிட்டு எங்க கூட வீட்டுக்கு வந்துடுங் கோன்னு கெஞ்சிக் கேக்கறோம்,' என்றாள் பூவாயி.

'வராட்டி...???- குறுக்கே புகுந்து கேட் டான் குப்பன்.

'சத்தியாக்கிரகம் பண்ணுவோம்’’

இதைக் கேட்டதும் கூடியிருந்த ஆண்கள் அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

'அது என்னடி, சாந்திக்கிரகம் புதிசு புதிசா என்னெல்லாமோ கத்துக்கிட்டு வந்து பேசறே. இதெல்லாம் அந்தப் பொறுக்கி பலவேசம் கத்துக் குடுத்தானா...???

மய-4