இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எட்டிப் பறிக்க இயலாக் கனிகள்
எளிதில் பொறுக்கி எடுத்தாள்;-அவள்
ஒட்டிக் கிடந்த மணலை வாயால்
ஊதி ஊதித் துடைத்தாள்.
10
‘கனிதான் சுடுகின் றனவோ?’ என்றே
கைகள் கொட்டிக் களித்தான் ;-அவன்
‘இனியும் பொருள்தான் அறிந்தாய் இலையோ’
என்று சொல்லி நகைத்தான்.
11
‘சுடுதல் இல்லாக் கனியே செங்காய்
சுடுதல் பழங்கள்’ என்றே-வன
நடுவே வாழும் சிறுவன் சொல்ல
நானும் அறிந்தேன் இன்றே.
12
'மனமே மிகவும் கற்றோம் என்றே
மகிழ வேண்டாம் வீணே', -எனக்
கனிவாய் அவ்வை கடிதே கவியும்
கட்டிக் கூறினாளே.
13
அவ்வை கூறிய கவி
கற்ற துகைம் மண்ணளவு கல்லாத(து) உலகளவென்(று)
உற்ற கலைமடங்தை ஓதுகின் றாள்-மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டா புலவீர்!
எறும்புந்தன் கையால்எண் சாண்.
53