பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையையும் வாட்டத்தையும் பகிர்ந்து கொண்டு சில நாள் வாழ்ந்தேன். ஒரு நாள் - தில்லி போய்ச் சுற்றிவிட்டு ஒரு கடிதம் எனனை வநதடைநதது. அதை எழுதியவர் என் தந்தையின் நெருங்கிய நண்பர் லிங்கப்பா. தில்லியில் எங்கள் அண்டை வீட்டுக்காரராக இருந்தவர். இளமையில் என்னை எடுத்து வளர்த்தவர். என் வாழ்வில் நேர்ந்த விபத்துக்களை அவருக் கெழுதினேன். அவர் என்னைத் தமது மகளாக ஏற்றுக்கொண்டு இந்த வங்கிப் பணியிலும் அமர்த்தினார். நெஞ்சில் - கொந்தளிப்பு இருந்தாலும் அலையில்லாத கடலில் சலனமற்று ஒடிக் கொண்டிருக்கிறது. என் வாழ்க்கைப்படகு. நெடுமுடி: கவிஞர் முருகுசுந்தரம் 1Q8