பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிதில் கிட்டும் பரமபதம். இயற்கை வழங்கிய நிரந்தரமான பொதுவுடமை. பூ காயாக காய் கனியாக கனி விதையாக விதை செடியாக இயற்கை வகுத்த ஒரு மகரந்தச் சுழற்சி. கஸ்தூரிமான் வெளிப்படுத்தும் மணம் ஆணுக்கு வழங்கும் புணர்ச்சி அங்கீகாரம். குயிலியின் ஓயாத ஏக்கக் கூவல் ஆணுக்கு விடுக்கும் காதல் விண்ணப்பம் ஏன் - மாடு கூட இரவில் பலநாள் ஏங்கிக் கதறிய பிறகுதான் மிதிக்கடிக்கக் கொண்டு போகப்படுகிறது. பெண்ணிடம் புணர்ச்சிக் குறிப்பை உணராமல் எந்த விலங்கும் பலாத்காரம் செய்வதில்லை. கற்பழிப்பு மனிதனுக்கே உரியது. முருகுசுந்தரம் கவிதைகள் 55