பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

95


ஒவியங்கள் காண்கின்றன, ஊர்வன, பறப்பன, நடப்பன, நீந்துவன முதலியன ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பறவைகள், விலங்குகள் இவற்றின் உருவங்களே பல விலங்குகளின் ஒவியம் புல் தரையுடனும் காடுகளுடனும் சேர்த்து இயற்கைக் காட்சியாக எழுதப்பட்டுள்ளன. பறவைகள் மரக்கிளைகளில் இருத்தல் போலவும், மரங்கட்கு அடியில் இருப்பன போலவும் தீட்டப் பட்டுள்ளன. இரண்டு காட்டுக்கோழிகள் புதர் அருகில் இருத்தலைப்போல எழுதப்பட்டுள. ஒரு தாழியின் மீது பல விலங்குகளின் உருவங்கள் தீட்டப்பட்டுள. இத்தகைய சித்திரங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் ஏலம், சுமேர் முதலிய இடங்களிலும் கிடைத்துள்ளன. மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த பாண்டங்கள் மீது மனித உருவம் தீட்டப்பட்டிலது. ஆனால் ஹரப்பாவில் கிடைத்த உடைந்த மட்கல ஒடு ஒன்றின் மீது மனிதன் உருவமும் குழந்தை உருவமும் தீட்டப்பட்டுள்ளன. இவை அல்லாமல், மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த பாண்டங்கள் மீது மீன்தோல், ஒரு வட்டத்திற்குள் மலர், வாயில் மலர் வைத்துக்கொண்டு நிற்கும் மயில் மலர்க்கொத்துக்கள், மாவிலை, அரசிலை முதலியவற்றின் உருவங்கள் தீட்டப் பட்டுள்ளன. சிலவற்றின்மீது கழுகுகள் வரிசை வரிசையாகப் பறப்பன போலவும், மயில் ஒன்று பறப்பது போலவும் வரையப்பட்டுள்ளன. ஒன்றின்மீது ஓடம் ஒன்று எழுதப்பட்டுளது. சிந்து ஆற்றில் பல ஓடங்களைத் தினமும் கண்ட அம்மக்கள், ஓடத்தின் படத்தைத் தீட்டப் பெரிதும் விரும்பினரிலர். என்னை? ஓடம் திட்டப்பெற்ற பாண்டம் இதுகாறும் ஒன்றே கிடைத்த தாதலின் என்க.

எங்கும் எல்லா எழிலுறு ஒவியம்

ஒரு மட்பாண்டத்தின்மீது வட்டத்திற்குள் வட்டம் தீட்டப்பட்டுளது. இவ்வட்டங்கள் பிழைபடாமல் அமை வதற்காக, முதலில் சதுரக் கோடுகள் இழுக்கப்பட்டு, அவற்றின் உதவியால் வட்டங்கள் ஒழுங்காக அமைக்கப்