3.24) இராஜாம்பாள்.
ஆசை விளுக்கு திங்கே, ஆசை யிளுக்கு திங்கே மருந்து இளுக்கு தங்கே: மருந்து இளுக்கு தங்கே மருந்து இளுக்குதங்கே குடு குடு, குடு குடு, குடு குடு.
இப்படிக் குடுகுடுப்பை லோகசுந்தரியின் வீட்டண்டை கூவிக்கொண்டு போகையில், லோகசுந்தரியின் வீட்டுத் தெருவில் கோலம் போட்டுக்கொண் டிருந்த சுந்தரம் என்னும் வேலைக்காரி இதைக் கேட்டுக் கோலம் போடு வதை நிறுத்திவிட்டுக் குடுகுடுப்பையைக் கூப்பிட்டுச் சமா சாரம் என்னவென்று கேட்டாள். - குடுகுடுப்பை ஐயோண்னு போருன், ஐயோண்ணு போருன். ஐயோண்ணு ரங்கூனில் சாகப்போருன், பலுகவே, பலுகவே, மன்ச்சி வாக்கு பலுகவே குடு குடு, குடு குடு, குடு குடு.
சுந்தரம்: யார் ஐயா சாகப் போருன்? குடுகுடுப்பை குடு குடு, குடு குடு, குடு குடு; தாயி, து கேக்கிருங்கோ? யாருண்ணு கேக்கிருங்கோ? கேக்கிருங்கோ? சுடுகாட்டிலிருந்து ஓடிவந்து யாருண்னு சொல்லு: யாருண்ணு சொல்லு; சொல்லு குடு குடு, குடு குடு, குடு குடு. வேணு டு, வேனு நாயுடு, வேனு நாயுடுண்ணு ஜக்கம்மா
சுந்தரம்: ஏன் ஐயா சாகப்போகிறார்?
குடுகுடுப்பை தாயி ஏனுண்ணு கேக்கிருங்கோ, ஏனுண்ணு கேக்கிருங்கோ, ஏனுண்ணு கேக்கிருங்கோ: ஜக்கம்மா மலையாள பகவதி, ஒம்பது கம்பளத்தாள், உடனே சொல்லு, உடனே சொல்லு, ஓடிவந்து சொல்லு. குடு குடு, குடு குடு, குடு குடு; சுந்தரம் தாயி வேணு நாயுடுவண்டை சண்டைபோட, கோவிச் சிக்கிட்டு ரங்கூன் போனன். குடு குடு, குடு குடு, குடு கு;ே ரங்கூனுக்குப் போனலும் சுந்தரம் தாயண்டை இருக்கப் பிரியம் கூடவே போச்சு; கூடவே போச்சு; கூடவே போச்சு. குடு குடு, குடு குடு, குடு குடு. ரங்கூ னுக்குப் போனதும், மகமாயி, சொத்துக்காரி, பர்மாக் காரி வேணு நாயுடுமேல் பிரியப்பட்டாள். குடு குடு, குடு குடு, குடு குடு. சுந்தரம் தாயண்டை இருக்கப் பிரியம்.