பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 85 மிடுகிறானே ஒகோ காதலர்களோ மல்லிகாவும் என்னைப் போல் யெளவன ஸ்திரீயல்லவா? இருக்காதா உண்மைக் காதலை நாம் ஏன் கெடுக்க வேண்டும். அவர்கள் இச்சைப்படி செய்து கொள்ளட்டும். அவள் திரும்பி வரும் போது வரட்டும். கஷ்டப் பட்டவர்களுக்கு அல்லவா காதலின் துன்பம் தெரியும். மல்லி சரி நேரமாகிறது. நான் போக வேண்டும். விஷ யத்தைச் சொல்லும். (அவன் நான்கு பக்கங்களையும் பார்க்கி றான்) ஏன் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பார்க்கிறீர்? என்ன பயம்! என் எஜமானி அம்மாள் மெத்தையில் இருக்கிறாள். சசி நான் உன்னிடத்தில் ஒரு இரகசியம் தெரிவிக்க வேண் டும், இங்கே சமீபத்தில் வேறு யாருமில்லையே. - மல்லி : ஒருவரும் இல்லை. சொல்லலாம். வஸந்த (தனக்குள்) இரகஸியமா! அப்படியானால் நான் இனிமேல் இவர்கள் பேசுவதைக் கவனித்தல் கூடாது. சசி வஸந்தஸேனை உன்னை அடிமைத் தன்மையில் இருந்து நீக்குவதற்கு எவ்வளவு பொருள் கேட்பாள்? வஸந்த (தனக்குள்) அவன் என் பெயரைச் சொல்லுகி றானே! இந்த இரகசியத்தில் நானும் சம்பந்தப்படுவதாய்த் தோன்றுகிறது. ஆகையால் இந்த ஜன்னலுக்கு சமீபத்தில் மறைந்திருந்த வண்ணம் கேட்கிறேன். மல்லி தான் இந்த மாளிகைக்கு அதிகாரியாகும் பொழுது யாதொரு பணமும் பெறாமல் என்னை விடுவிப்பதாக என் எஜமானி அம்மாள் பல தடவைகளில் தெரிவித்திருக்கிறார்கள். அதிருக்கட்டும், என்னை மீட்கத் தேவையான அவ்வளவு பொருள் உம்மிடத்தில் எது? சசி விருத்தம் எதுகுலகாம்போதி என்னரு மணியே! யுன்னை யெத்தின மடைவே னென்று பன்னரு துயரி லாழ்ந்து பரிபவ மடைந்தேன்-வேண்டிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/87&oldid=887661" இலிருந்து மீள்விக்கப்பட்டது