பக்கம்:வரதன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7:ራ வரதன் யிலிருந்து இதுவரையில் இங்கே தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். நீங்கள் சொல்லுகிறபடி கான் ஒரு சிறுவனையும் பார்க்கவில்லை’ என்ருன். பிறகு அவன் ஏதோ யோசித்து, ‘சாமி, அவன் என்ன சட்டை போட்டுக்கொண் டிருந்தான் ? என்ருன். அப்போது, ஆசிரியர் என்னைப் ப ா ர் த் த ா ர். வரதன் அன்று என்ன சட்டை போட்டுக்கொண்டு போனனென்று எனக்குத் தெரியாது. ஆதலால், நான் பேசாமல் இருங் தேன். பிறகு ஆசிரியர் சிறிது நேரம் யோசித்து, 'வெள்ளைச் சட்டை' என்ருர். பிறகு, அவன் அவ னுக்கு என்ன வயது இருக்கும் ? சுமார் ஏழு அல்லது எட்டு இருக்குமா ? என்ருன். அதற்கு அவர், ஆம் : சரியாக ஏழே இருக்கும் என்ருர். அப்படியால்ை, அந்தச் சட்டை போட்ட ஒரு பையனும் ஒரு பிள்ளையாண் டானும் இந்த வழியாகப் போனர்கள்’ என்ருன். அப் போது என்ன மணி யிருக்கும் ? சரியாகச் சொல்ல முடி யுமா ?' என்று ஆசிரியர் கேட்டார். அதற்கு அக் கிழவன், என்ன சாமி, நான் கெடியாரமா (கடிகாரம்) வைத்திருக்கின்றேன். அவர்கள் போய் ரொம்ப (கிரம்ப) நேரமாகிறது. நான் அப்போது விளக்கு ஏற்றவில்லை. ஏறத்தாழ ஆறு மணி யிருக்கலாம் என்ருன். நான் அப்போது, அவன் காதில் என்ன போட்டுக்கொண் டிருந்தான் ?, என்றேன். அதற்கு அவன், அதையெல் லாம் யார் பார்த்தார்கள் ? அந்தப் பையன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனன்” என்ருன் : உடனே நம் ஆசிரியர், அவன் புத்தகம் பலகை வைத்துக்கொண் டிருந்தான ?’ என்ருர். அதற்கு அவன், ‘என்னமோ ? இருக்கலாம்-நான் கவனிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/79&oldid=891232" இலிருந்து மீள்விக்கப்பட்டது