பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முளரி என்ற தொரு யாழும் கண்டார்
யாழும் பாணரும் இன்று நம்மோடில்லை
இலங்கைக் திட்டின் பகுதிக்குப் பேரானது
யாழ்க்குல மெல்லாம் பழங்கலை வகையில்
சித்திரங்களாக சிற்பங்களாகத் தெரிவதல்லால்
வழக்கிலில்லை வழக்கிறந்ததும் பெருமையோ
பழய பண்கள் பலவும் இறந்துபட்டன
இருக்கின்ற சிலதில் சிலவற்றிற்கு
பெயர் தமிழாக இல்லை பெயர் திரிந்து வரும்வரவு
வைகறைக்கு இந்தோளம் என்பார்
பொழுதுபுலர பூபாளம் பாடுவார்
மதியத்தில் சாரங்கம் மாலையில் காம்போதி
அந்தியில் கல்யாணி ஆர்இரவில் ஆகரி
வேளைக்கு வேளை வேறுபடும் ராகம்
முன்னைத்தமிழன் தந்துபோன செல்வம்
வடிவிழந்தது மரபிழந்தது யாழிழந்தது தமிழிழந்தது
ஆயினும் சுருதியிழக்கவில்லை சுவையிழக்கவில்லை
பகலுக்கு பண்கள் பத்தென்று வகுத்தார்
நாழிகை மூன்றுக்கு ஒன்றாக நடத்தினார்
புறநீர்மைப் பண்ணே சீகண்டி ராகம்
காந்தாரத்தை இச்சிச்சி என்றார்
கௌசிகமே பைரவி ஆயிற்று
இந்தளத்தை நெளித பஞ்சமி என்பார்
தக்கேசி பண்ணே காம்போதி ஆகும்
சாதரிப் பண்ணை பந்துவராளி என்பார்

22