பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செந்துறையின் வழக்காறும் வரலாறும் இதுவே
இயலும் இசையும் மெய்பாட்டுடன் இசைய
நாடகத் தமிழ் என்று நவின்றார்
கதையும் நிகழ்ச்சியுமாக தொடர்ச்சியுடன்
உள்ளதும் சொல்வார் புனைந்தும் உரைப்பார்,
ஊர்ச் சதுக்கத்தும் திருக்கோயில் முன்பும்
பொதுக் களத்தில் நிகழ்த்துவதைப் பொதுவியல் என்றார்
அரையன் பேரவையில் ஆடுவது வேத்தியல்
பல்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில்
நிகழ்ந்தவற்றை நிரல்பட தொகுத்து
உணர்வோடு கலந்து உயிரோடு படைப்பார்
வசைக்கூத்து புகழ்க்கூத்து வரிக்கூத்து வரிச்சாந்தி
தேசிகம் இயல்பென்று இரண்டிரண்டாக இனம் பிரித்து
இன்னும் உள்வரியாக குறவை கலைநயம்
சரணம் நோக்கு குடக்கூத்து தோற்பாவை
எனப் பல்வேறு கிளைகள் விரித்தார்
ஆகக் கதைகளை நடிப்பது நாடகம்
உணர்வுகளை கருத்துக்களை உருவகப் படுத்தி
ஊமை நிலையிலும் உவமை நிலையிலும்
பண்ணும் தாளமும் பின்னணி செய்ய
காலில்சதங்கை கலீர் கலீர் என
குடகம் மகரம் வலம்புரி விற்படி
இளம் பிறை என முப்பத்து மூன்று முத்திரை
சுவைக்குச் சுவைகூட்டி மேடை ஏற்றினார்
குறிஞ்சிக் கூத்து குன்ற குறவையாக

24