பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலந்தும் கலவாத தமிழியல் எதுவென்று
சரித்திரம் தெரிந்தவர்க்குத் தடம் தெரியும்
முடிமரபும் குடியரசுமாக மோதிக்கொண்ட
குழப்பமே வடபுலத்து வரலாற்று அடிக்கோடு
தமிழனின் தலைசங்க நாட்களெனும்
மூத்த வரலாற்றுக் காலத்துக்கு முன்னதாக
லெமூரியம் நெடுங்கடலுள் மாய்ந்து
குமரிகண்டம் ஆவதற்கு முன்னே
இயக்கரும் நாகரும் மோதிக் கொண்ட
முன்னாள் கதையே கந்த புராணம்
குறிஞ்சிக்கு ஒரு கிழவன் சேயோன் முருகன்
அவனுக்கு மகள் கொடை தந்தவன் இந்திரன்
மருதத்து வேந்தன். மகபதி அல்ல
தன்னினப் பங்காளிக் காய்ச்சலில்
அவுணர்க்குப் பகையானான் அலைவாய் களமானது
பெரும் பெயர் முருகன் போர்த்தலைவனான்
சூரன் தோற்று வெற்றி வேலானதும்
பழந்தமிழ் வரலாற்றுச் சுவடே
அவன் தம்பி சிங்க முகன் பேர்கொண்டதே சிங்களம்
தென் தமிழ் நிலத்தில் சூரன் பேரால் கோட்டையுண்டு
சூர ஆதித்தச் சோழன் என்றொருவன்
சாவகத்திலிருந்து வெற்றிலை கொண்டு வந்தான்
மலையத்து வஜனின் மனை அரசி
காஞ்சன மாலைக்குத் தந்தையானவன்

42