பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐநூற்று நாற்பத்து ஒன்பது புலவர்
நாலாயிரத்து நாநூற்று நாற்பத்து
ஒன்பது பாடல் இயற்றினார் என்ப
பரிபாடல் முதுநாரை முதுகுருகு முதலாக
களரி யாவிரை எனக் கணக்கிருந்த நூல்கள்
தமிழ் வழக்கில் இன்றில்லை இருந்ததென்று சாற்றினார்
களவியல் உரைகாரர் கட்டுரைத்த கதை இதுவே
முதற் சங்கத் திருந்த முதும் பெரும்புலவரான
முரஞ்சியூர் முடி நாகராயர்
அலங்குகளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
என எழுதிய புறநாநூற்றைப் பார்த்தால்
பாரத காலத்தில் முடி நாகர் இருந்தவர்
சோறு கொடுத்த உதியன் சேரனும்
சங்கத் தமிழ் நடந்த சம காலத்தவனே
பாரதப் பாழுக்கு பிழைத்து வந்தவன்
பார்த்தனின் பேரன் பரிட்சித்து என்பார்
அவன் காலம் ஏசுகிருஸ்துக்கு முன்னால்
ஆயிரத்து நானூறு ஆண்டுகள் என்பார்
தெற்கில் தலைச்சங்கம் நடந்தபோது
வடக்கில் பாரதம் நடந்தது என்பதே
ஆதாரப்படிபெறப்படும் வரலாற்று உண்மை
சங்கக் கணக்கை கூட்டி எண்ணினால்....

56