பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை:-

தெற்கின் தலைச்சங்க துவக்க நாட்களே
வடக்கில் ஆரிய வேத காலம்
முன்னைப் பழங்குடிகளை வென்று விரட்டி
இந்து வெளியில் ஆரியம் இடம் கொள்ள
இந்திர ருத்திர பிரமரை வேண்டினார்
அதனை தோத்திர காலமென்று சொன்னார்
மழைக்கும் மகப் பேற்றுக்கும்
மாற்றாரை வதைப் பதற்கும் ஆக
வேள்விகள் நடத்தினார் மந்திரகாலம்!
ராமகதைக்கு நாட்கள் அதுவே
ராம அனுமனுக்கு பாரத பீமன்
தந்தை வழியில் தம்பியாவான்
சௌகந்தி மலர் பறிக்க பீமன்
இமயத்துக்குச் சென்ற போது
வழியில் அனுமன் மறித்தான் என்பது கதை
மற்றும் பார்த்தன் தென்திசை வந்தபோது
சேதுக்கரையில் அனுமனை சந்தித்த சேதியுமுண்டு
பாரதத்துக்கு காரணனான கண்ணன்
சியமந்தக மணிக்காக ஜாம்பவான் என்னும்
முதுபெருங் கிழவனை மோதினான் என்பது பாகவதம்
ஆக ராமர் காலத்து நாயகரான
முதிய ஜாம்பவான், அனுமனை
பாரத தீரர்கள் பார்த்தனும் கண்ணனும்

69