பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரி 167

ஈடுபாடு ஏற்பட்டது. அவர்களிடம் வியாபாரம் பண்ணுவது போல், சிரித்துச் சிரித்துப் பேசி அவர்களையும் பேச்சுக்கிழுத்தாள். இவர்களில் ஒன்றிரண்டு பேர் எடுப்பான உடல் தோற்றமும், உரையாடிக் களிக்கும் மனமும் திறமையும் பெற்றிருந்தார்கள்.

ஒரு நாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் சினிமாவுக்குப் போய் விட்டாள் இரவுக் காட்சிக்கு. அவள் திரும்பி வந்ததும், சிவராமன் கோபித்துக் கொண்டார். இரவு 10 மணிக் காட்சிக்குத்தானா போக வேண்டும்? மாட்னிக்குப் போகிறது தானே? இல்லாவிட்டால், கேட்டுக் கொண்டு 6.30 மணிக்காட்சிக்குப் போறது!’ என்று உபதேசித்தார்.

அது அவளுக்குப் பிடிக்க வில்லை. 'வேலைகளை முடித்து விட்டுத் தானே போகணும்? சாயங்காலக் காப்பி போட்னும், ராத்திரிச் சாப்பாடு தயாரிக்கணும். இரவுக் காட்சி தான் செளகரியம். வேலைக்கு இடைஞ்சலாக இராது' என்றாள்.

பிறகு, வாரம் தோறும் அவள் அவ்வாறே செய்யலானாள், அவள் ஒரு மாறுதலாக சினிமா பார்க்கத் தான் போகிறாள் என்றே சிவராமன் எண்ணினார். அது தவறு என்பது அவருக்கு விரைவிலேயே புரிந்து விட்டது.

'உங்க வீட்டு வேலைக்காரியை தியேட்டரிலே பார்த்தேன், ஸார். கூல் ட்ரிங்க்ஸ் விற்பானே ஒருத்தன்-தள்ளு வண்டியிலே வச்சு - சிவப்பா, கட்டுகுட்டுணு, சிலிர்த்து நிற்கும் கிராப்பும் சிரிச்ச முகமுமா - அவனுக்கும் அவளுக்கும் சிநேகம் போலிருக்கு: அந்த அம்மா தன்னை மறந்து அவன் கூடப் பேசிச் சிரிச்சுக்கிட்டு நிக்கறதை நான் பார்த்தேன்' என்று அவரது ஆபீசைச் சேர்ந்த ஒருவன் ஒரு நாள் அவரிடம் சொன்னான். அவருக்குத் 'திக் கென்றது'.

அன்றே அவர் பஞ்சவர்ணத்தம்மாளிடம் கண்டிப்பாகச் சொல்லி வைத்தார். இனிமேல் அவள் சினிமா இரவுக் காட்சிக்குப் போகக் கூடாது; அப்படிப் போய் விட்டு வந்தால் கட்டாயமாகத் கதவைத் திறக்கவே மாட்டேன் என்று.

முந்திய நாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் வீட்டில் இல்லை. 'மனசே சரியில்லை. சினிமாவுக்குப் போறேன் என்று சொல்லி விட்டுப் போனாள் என்று மனைவி தெரிவித்தாள். உடனே அவரும் தியேட்டர் பக்கம் போனார். தியேட்டருக்கப் போக வேண்டிய தேவையே ஏற்படவில்லை. பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற ஒரு பஸ்ஸில் அவளும் கூல்ட்ரிங்க்ஸ் விற்பவனும் ஏறுவதும், உள்ளே போய் ஒரே ஸீட்டில் இருவரும்