பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ஒரு யோசனை - 125 ஆனல் நம்முடைய நாட்டிலோ பெண்கள் நூற்றுக்கு ஒருவர் இருவரே எழுத்து வாசனை பெற்றவர்கள். ஆதலால் நம் பெண்களுக்கு இந்தக் கர்ப்பத்தடை விஷயம் எளிதில் எட்டுவதில்ல்ை. இதர வசதிகளும் கிடையாது. ஆதலால் ஆண்களே இவ்விஷயத்தில் சிந்தனை செலுத்த வேண்டியவர் களாய் இருக்கிருர்கள். அவர்கள் நாட்டின் நலனையும் குடும் பத்தின் rேமத்தையும், குழந்தைகளின் நல்வாழ்வையும் மனைவியின் சுகத்தையும் கருதிக் குழந்தைகள் அதிகமாகப் பெருமலிருப்பதில் அதிகமான அக்கரை காட்டவேண்டும். அவர்களுக்கு ஏற்ற முறை 'ரப்பர் உறை- களிம்பு முறைய்ே'யாகும். அதை அவர்கள் எளிதில் அனுஷ்டிக் கவும் முடியும். அதல்ை நூற்றுக்கு நூறு நன்மை அடையவும் முடியும. ரப்பர் உறை-களிம்பு மாத்திரைகள்-ரப்பர் மூடி ஆகிய மூன்று வ்ழிகளும் கர்ப்பத் தடைக்கு உதவியான வைகள்ே. ஆனல் எந்த வழியை அனுஷ்டித்தாலும் அதை அனுஷ்டிப்பதில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலும் அந்த வழி பயன் தராது, கர்ப்பம் உண்டாய்விடும். (1) ரப்பர் உறையில் கண்ணுக்குப் புலகைாத சிறு துவாரம் இருந்துவிட்ட்ால் போதும், அதன் வழியாக நுண் னுயிர்கள் பெண்குறியில் விழுந்து கர்ப்பம் உண்டாக்கி விடக்கூடும். (2) களிம்போ மாத்திரையோ குறிகள் முழுவதிலும் பரவாமிலிருந்து விட்டால் நுண்ணுயிர்களில் சில 'கர்ப்பப்பைக்குள் சென்று விடக்கூடும்: (3) கர்ப்பப் பை வாசலை மூடும் ரப்பர் மூடி அந்த வாசலுக்குப் பொருத்தமில்லா திருந்தாலும், சம்போக சமயம் அணுவளவேனும் விலகிவிட்டாலும், மூடியில் கண்ணுக்குத் தெரியாத சிறு துவாரமிருந்துவிட்டாலும், சுக்கில உயிர்கள் கர்ப்பப் பைக்குள் சென்று கர்ப்பம் உண் டாக்கி விடலாம். ஆதலால் இவ்விஷயத்தை ஆராய்ந்துள்ள அறிஞர்கள் ஏதேனும் ஒரு வழியை மட்டும் நம்பியிராமல்,_ஏகக்ாலத்தில் இரண்டு வழிகளை அனுஷ்டித்தல் அத்தியாவசியம் என்றும்,