பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 39 இந்தப் பால் விலை நாலணுவுக்குக் குறைவில்லை. பால் மட்டும் போதாது, பழங்கள், காட்லிவர் ஆயில் (மீன் நெய்) முதலிய வைகளும் தேவை. அதற்கு இரண்டு அணு என்ருலும் குழந்தைக்கு மாதம் ஒன்றுக்குக் குறைந்தது 10 ரூபாயாவது வேண்டும். ஆனல் நம் ஏழை மக்கள் நிலைமை என்ன ? ஒரு குழந்தைக்கு 10 ரூபாய் வீதம் செலவு செய்ய எங்கு போவர்? அந்த 10 ரூபாயைக்கொண்டு அந்தக் குடும்பம் முழுவதுமே காலந் தள்ளி விடுமே ! மாதம் 10 ரூபாய் வருமானமும் கிடையாது தவிக்கும் குடும்பங்களே ஏராளம். ஆதலால் தாய்ப் பால் குடிக்கும் பொழுது சத்தில்லாத ஆகாரம்; தாய்ப் பால்கூடக் கிடையாது- பசும்பாலுக்கு வழியின்றி -ஜவ்வரிசிக் கஞ்சியைக் குடித்து, வயிறு பருத்து, கால் கைகள் சிறுத்து வளரும் குழந்தை உருவங்கள் எத்தனை ! ஒரு வயதாய் விட்டால் அந்தத் தாய்ட் பாலும் இல்லை. சோற்றையே திணிப்பது வழக்கம். இந்தக் குழந்தைகளின் வளர்ச்சி என்னவாகும் ? ஆகாரத்துக்கே இந்தத் திண் டாட்டமானல் ஆடை முதலியவைகளைப் பற்றி அதிகம் கூறுவானேன் ? வாழைத்தோட்டம் வைக்க எனக்கு ஆசை தான். நண்பர்களும் வாழைக்கன்றுகள்_தரத் தயாராயிருக் கிருர்கள். ஆனல் ஆசையும் பிறந்து, கன்றுகளும் கிடைத்து விட்டால் மட்டும் போதுமோ ? அந்தக் கன்றுகளே நட்டு வளர்க்க இடம், போஷணைக்குரிய உரம், வளர்வதற்குரிய ஜலம், பாதுகாவலுக்குரிய வேலி முதலியன வேண்டுமே. அவைகளுக்கு என் கையில் பணமுண்டா? பணமிருந்தால் தோட்டத்தில் ஆசை வைக்கலாம். இல்லையானல் இல்லை. என்னிடம் பணமுண்டு, ஆனால் சொற்பம்தான். அப்படி யாயின் பெரிய தோட்டத்தில் ஆசை வைக்கக் கூடாது. நண்பர் தரும் கன்றுகளை நட்டுவிடக் கூடாது. காப்பாற்ற முடியாத கன்றுகளை வைத்துக் காணும் பயன் ஒன்றுமில்லை. ப்ல மரங்களை வைத்துக் காணும் பலன் பெருது வருந்து வதை விட நல்ல குலை தள்ளும் நாலைந்து மரங்கள் இருந்தால் போதும். சக்தியின் அள்வுக்கு ஆசையை அடக்கிவிட வேண்டும். அதுபோல், குழந்தைகளில்லாத வாழ்வு குறைவுடைய தாகும். கடவுளும் குழந்தைகள் தரக் கருணை செய்கிறர் என்று எண்ணிக் கொண்டு குழந்தைகளைப் பெற்றுத்தள்ளி விடலாகாது. பெறுங் குழந்தைகளைக் காப்பாற்றச் சக்தி யுண்டா என்று யோசித்தே குழந்தை பெறுங் கைங்கரியத்