பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - விவாகமானவர்களுக்கு - விந்து போகும்பொழுது மூத்திரம் போகாது. மூத்திரம் போகும்பொழுது விந்து போகாது. சம்போகம் செய்து உணர்ச்சி மேலிட்டு விந்து ஆண்குறியிலுள்ள குழாய் வழி யாக வெளியேறப் போகும் சமயத்தில் ஆண்குறியின் பின் புறம் அடிப்புறத்தில் உடம்புடன் சேர்ந்துள்ள இடத்தில் விரல்களைக் கொண்டு அழுத்தி ஆண்குறிக் குழாயை இறுக்கி விட்டால் கீழே வரும் விந்து வெளியே செல்லாமல் மூத்திரப் பைக்குள் சென்று விடும், பின்னர் ஆண்குறியை வெளியே எடுத்து மூத்திரம் பெய்தால் அத்துடன் வந்து விடும், பெண் குறியில் விழுந்து கர்ப்பம் உன்டாக்காது. இது கூறுவதற்கு எளிதுதான். ஆனல் செய்யப் போனல் அதிக்க் கஷ்டமேயாகும். ஆணும் இறுக்கலாம், பெண்ணும் இறுக்கலாம் ஆல்ை உணர்ச்சி ததும்பி மெய் மறந்து நிற்கும் சம்யத்தில் இதில் ஞாபகமிருக்க முடியுமா, இருந்தாலும் இறுக்க முடியுமா? அப்படியே இறுக்கிலுைம் போதுமான அள்வு இறுக்காவிட்டால் பிரயோசனப்படவும் செய்யாது. போதும்ான அளவு இறுக்கி விந்தை முத்திரப்பைக்கு அனுப்பிவிட்டாலும் சம்போக ஆரம்பத்தில் சுரக்கும் நீருடன் கலந்து வரும் சுக்கில உயிர்கள் கர்ப்பம் உண்டாக்கி விட ஏதுவுண்டே. ஆதலால் இந்த முறையும் கர்ப்பத்தைத் தடுப்பதற்கு உபயோகப்படாது. சில பயிற்சி முறைகள் விந்து பெண்குறியில் விழாதபடி செய்யும் சம்போக முறைகள் பிரயோஜனமில்லை என்று கண்டோம். விந்து பெண்குறியில் விழுந்தாலும் கர்ப்பம் உண்டாகாமல் இருக் கும் ப்ொருட்டு அநேக தேசங்களில் தொன்று தொட்டுக் கையாளப்பட்டு வரும் சில முறைகளைப் பார்ப்போம். (1) சில ஜாதியாரிடை ஆண்கள் மேலே படுத்துச் சம்போகம் செய்வதற்குப் பதிலாகப் பெண்களே ஆண் களின்மேல் உட்கார்ந்து சம்போகம் செய்கிருர்கள். இந்த மாதிரி மலையாளப் பிரதேசத்திலுள்ளவர்கள் செய்வதாக அறிகிருேம். நம்முடைய பழைய நூல்களிலும் முக்கியமாகப் பெண்களே சம்போகத்தை நடத்தினர் என்பதைக் Ј, ГТСКЛОГоt)ITLD .