பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 91 காக ஆண்மகன் அடிக்கடி புணர்ந்து விந்தை வெளியாக்கித் கொண்டிருந்தால் அவனுடைய தேக சுகமும் பலமும் என் ஞகும்? இது எல்லா விதத்திலும் தீமையே உண்டாகும். (4) சம்போகம் நடந்து விந்து வெளியானதும் சாதா ரணமாகக் கணவனும் மனைவியும் ஒருவரை யொருவர் கட் டிப் பிடித்துக்கொண்டு அந்த நிலையிலேயே தூங்கிவிடுவார் க்ள். அதுதான் சரியான காரியமும் ஆகும். ஆனல் கர்ப்பத் தடையை விரும்புகிறவர்கள் அப்படிச் செய்யாமல் விந்து வெளியானதும் கணவன் அரை நிமிஷங்கூடத் தாமதியாமல் மனைவியை விட்டுப் பிரிந்து எழுந்துவிட வேண்டும். மனைவி அவசரம் அவசர்மாக எழுந்து தேகப் பயிற்சி செய்யவேண் டும் என்று கூறுகிருர்கள் விநாயகர் சன்னதியில் செய்வது போலத் தோப்புக் கரணம் போடுவது நல்லது என்பர். இடுப்பில் கைகளை ஊன்றி நிற்கும்படியாகப் பலமுறை உட் கிர்ந்து எழுந்திருப்பது விந்தைப் பெண்குறியிலிருந்து வழிந் தேர்ட்ச் செய்வதற்கு ஏற்றது என்று சில டாக்டர்கள் அபிப் பிராயப்படுகிருர்கள். (5) இத்தாலி தேசத்தில் ஏழைப் பெண்கள் விந்து வந்ததும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வயிற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, இருமி இருமி விந்தை வெளியாக்குவார்களாம். (8) ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதிக் குடிகளின் பெண்கள் எழுந்து உட்க்ார்ந்து கால்களை அகற்றி வைத்துக்கொண்டு, இந்நோக்கி முக்கி, முக்கி விந்தை வழியச் செய்வார்கள் என்று மார்டன் என்பவர் கூறுகிரு.ர். (7) நியூ கினி என்னும் நாட்டிலுள்ள பெண்கள் அதே போல் உட்கார்ந்து கொண்டு சுமார் 10-நிமிஷ நேரம் வயிற்றைத் துருத்திக் கொண்டும் உள்ளே இழுத்துக் கொண்டு மிருந்து விந்தை உள்ளே செல்ல வொட்டாமல் தடுப்பார்கள் என்று ஐவான் பிளாஷ் என்பவர் கூறுகிரு.ர். (8) சம்போகம் முடிந்ததும் மூக்குப் பொடியோ அல்லது மிளகுத்துளோ மூக்கில் வைத்து உறிஞ்சித் தும்ழல் போட்டால் விந்து பெண் குறியில் தங்காமல் வெளியே வந்துவிடும் என்று சிலர் எண்ணுகிருர்கள்.