பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 109 பகத்சிங் : யார் பயங்கரவாதிகள்? பயிரைக் காக்கும் வேலியில் முள் இருக்கத்தானே செய்யும். அதற் காக வேலியை இகழ்வதில்லை. கம்மைப் பயங்கர வாதிகள் என்று சொல்லும் அந்தப் பரிதாப மனிதர் களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆல்ை ஒன்றுமட்டும் உறுதி. நமது இந்திய சோவடி லிஸ்ட் ரிபப்ளிக் சங்கத்தின் பயங்கரப் படை இல்லாமல் இருந்தால், இதுவரை இந்திய உயிர் களைப் புழுப் பூச்சிகளைவிடக் கேவலமாக நசுக்கி யிருக்கும் இந்த ஏகாதிபத்தியம். இந்த உண்மை யைச் சரித்திரம் இவர்களுக்குச் சொல்லும். அதிருக் கட்டும் ராஜகுரு தோட்டாக்கள் எவ்வளவு இருக்கும்? எத்தனே ரவுண்டுக்கு வரும்: ராஜகுரு : அறுபது ரவுண்டுக்கு வரும் ஐநூறு வெடி குண்டுகள் தயார். (விசில் சத்தம் கேட்கிறது. எல்லோரும் திகைத்து நிற்க, சந்திரசேகர ஆசாத் வருகிருர்,] பகத்சிங் : வாழ்க எம் தலைவன்! புரட்சி வாழ்க உடனே புறப்படுவோம். சுகதேவ் : கொஞ்சம் பொறுங்கள்! இரண்டு நாட் களாகக் குடல காய்கிறது. கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். அதன் பின் போகலாம். பகத்சிங் : ரீ கினைவுபடுத்தியவுடன்தான், பசியின் வேதனை ஞாபகத்திற்கு வருகிறது. எப்படி இப் படியே போகப் போகிருயா? சுகதேவ் . இல்லை; மாறுவேடத்தில். பகத்சிங் : அதைச் செய். காட்சி முடிவு