1 10 வெற்றி மேல் வெற்றி பெற...
எவன் மற்றவர்களுக்கு எதிராகத் தன்னைப் பாது சரத்துக்கொள்ள அரண் அமைக்கிறானோ அவனால் பார்க்க முடிவதில்லை;
ஓ! அன்பனே; உன்னில் உள் நோக்கியுள்ள தவறு தளை, உன்னில் உள்நோக்கியுள்ள அறியாமையை உன் உள்ளே, தன் ைலத்தில் வேர் ஊன்றிய மாயத்
தோற்றத்தை அறிந்து உணர்ந்து கொள்;
உணர்ந்ததும், தவறுகளை விலக்கிவிட்டு உண்மையைப் 1ற்றிக் கொள்;
அறியாமையிலிருந்து தூய்மையான அறிவொளிக்கு விரைந்து செல்.
உன் உள்ளேயுள்ள பகைவர்களை எதிர்த்து நீயாகவே உனக்கு ஒரு பாதுகாப்பு அரணை அமைத்துக் கொள்.
இதே வழியினால்தான்் அந்த எல்லாம் நிறைந்தவரை அடைய முடியும்;
வேறு எந்த வழியாலும் அவரை அணுக முடியாது; எவன் தன்ன லத்திற்கான ஆடை எதுவுமின்றி இருக்க விரும்புகிறானோ அவன் வந்து உண்மைக்கான ஆடையை அணிந்து கொள்ளட்டும்;
தங்களுக்காக உயிரைவிட எவன் விரும்புகிறானோ அவன் வந்து உண்மையின் குழந்தையாக மறு பிறவி எடுக் கட்டும்;
எவன் தன்னை வெறுமையாக்கிக் கொள்ள விரும்பு கிறானோ அவன் வந்து எல்லாம் நிறைந்தவர் பற்றிய அறிவால் தன்னை நிரப்பிக் கொள்ளட்டும்.
நன்மையே மிக மிக உயர்வானது,
பணிவே மிக மேன்மையானது,