116 வெற்றி மேல் வெற்றி பெற...
எவன், மிக்க உறுதியுடன் தன்னலத்தைப் போக்கி, உண்மையையே தனது கடவுள் எனக் கடைப்பிடிக்
கிறானோ அவனுக்கு, அங்கே
வெளிச்சமும் பாதுகாப்பும், ஆறுதலும் குணப்படுத்தலும், நிறைவும் மகிழ்ச்சியும் காத்திருக்கும். எழுச்சி அடைந்தவன் மேலும் கனவுகள் காண மாட்டான்.
அவ்வாறு உறுதியுடன் மாற்றம் பெறும்போதுஅவனுடைய வலப் பக்கத்திலே இருளான நுழை வாயிலும்,
இடப் பக்கத்திலே பார்ப்பதற்கு அழகான கோட்டை வாயிலும் தோன்றும்;
இருளான அந்த நுழைவாயினுள் குனிந்து வணங்கிப் புகுவான், அப்போது
மிக்க மனக்கவலை உண்டுபண்ணக்கூடிய ஏளனங்கள், பழிப்புகள், நகைப்புகள் எல்லாம் அவனைப் பின் தொடரும்,
அந்த வாயிலைத் தாண்டும்போது, இரு வாள்களை வெளியே எடுப்பான்.
முதலாவது-தேடுதல் வாள்’ எனவும் இரண்டாவது- கூறு படுத்தும் வாள்' எனவும் அழைக் கப்படும்.
தேடுதல் வாளினால் அறிவின் பகைவர்களை அழிப்பான்;
கூறுபடுத்தும் வாளினால், தீமையிலிருந்து நன்மையை வெட்டி எடுப்பான்.