த. கோவேந்தன் 121
அதுவே காயப்பட்ட ஒவ்வொரு புண்ணையும் குணப் படுத்தும் எண்ணெய்.
உடைந்துபோன ஒவ்வொரு உள்ளத்திற்கும் ஆறுதல் உண்டு.
சோர்வடைந்தவருக்கு ஆறுதல் நீடித்திருக்கும்; அலைந்து கொண்டிருப்பவர்க்கு நிலையான தஞ்சம். நம்பிக்கை அற்றவர்களுக்கும் சூறாவளியால்தூக்கி எறியப்பட்டவர்க்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் பாதுகாப்பான இடம்,
ஏனெனில், உள்ளத்தின் தீவினையற்ற தன்மை அங்கு நிலவுகிறது.
தன்னலம் என்னும் இருள் படர்ந்த இடங்களிலிருந்து மாற்றம் அடையும்போது ஏற்படும் இடைநிலையான திட மற்ற பள்ளத் தாக்குகளுக்கு அப்பால்,
புனிதத் தன்மைக்கான அமைதிப் பாதை காணப் படு கிறது.
தூய்மையின் உயரமான மலைமுகடுகளிலும், நேர்மை எனும் மலைகளின் மேலும்அன்பின் மேன்மையான மலைக்குன்றுகளின் மீதும்
சிடி4.ை
நிலையான உறுதியான அமைதி நிலவுகிறது. அங்கே, எப்போதும் நிலைத்திருக்கும் ஆறுதல் காத் திருக்கிறது.
எவனால் ஏறிச் செல்ல முடியுமோ, அவன் வந்து பார்க் கட்டும்;
எவன் முயல்கிறானோ, அவன் வந்து அறிந்து கொள்ளட்டும்;