பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வெற்றிமேல் வெற்றி பெற.

அவர்களே அறிவாளிகளாகவும் போற்றுதற்கு உரியவர்களு

மாகின்றனர்.

மனிதர்களுக்கு உண்மை, காட்சி தருகிறது. ஆனால்

அதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

அது அவர்களை அழைக்கிறது; ஆனால் அதனைச் செவிமடுப்பதில்லை.

அவர்களின் செயல்பாடுகள் மூலம் அவர்களுடன் அது பேசுகிறது;

அவர்களின் துன்பங்களில் நின்று அவர்களுக்காகவே உரத்துக் கதறி அழுகிறது;

அவர்களின் எல்லா வழிகளிலுமிருந்து ஒளியை அது கொடுக்கிறது;

ஆனால் அவர்கள் கேட்பதோ காண்பதோ இல்லை. ஏனெனில் அவர்களின் காதுகள் ஆழ்துயிலில் செவிடாகி விட்டன; அவர்களின் கண்களின் இமைகள் உறக்கத்தினால் இறுக்கியுள்ளன. 3.

அறிவுள்ளவர்களின் செயல்களில் உண்மை வெளிப்படு கிறது;

அதன் ஒளி அவர்களின் நல் ஒழுக்க வாய்மொழி களுக்கு ஒளியையூட்டி மயககத்தை நீக்குகிறது.

ஆனால், தவறான உறக்கத்திலிருப்பவர்களுக்கு மெய்ம்மையை வெளிக்காட்டும் விழிகளில்லை.

உறக்கத்திலிருக்கும் அவர்களின் கண் மடல்களில் விழும் உண்மையின் வெளிச்சம் காண்பதற்கு உரிய வகையில் எதிரொளிப்பதில்லை.

புரிந்துகொள்ளும் தன்மை எங்கு இல்லையோ அங்கு வாய்மொழிகளைத் திரும்பத் திரும்பப் புகட்டினாலும் பயன் கிடைப்பதில்லை.