186 வெற்றி மேல் வெற்றி பெற...
எங்கே அன்பு நிலைக்கிறதோ, அங்கே வெளிச்சம் நிலைக்கிறது.
எங்கே அன்பு இல்லையோ, அங்கே வெளிச்சம் ஊடுருவிச் செல்ல முடியாதவாறு கடும் இருளைக் கொண்டி ருக்கும்.
எங்கே அன்பு உளதோ,அங்கே வாழ்வும் திலைக்கிறது. எங்கே அன்பு இல்லையோ,அங்கே மீள முடியா இறப்பு உள்ளது.
எங்கே அன்பு உளதோ, அங்கே உண்மை உண்டு; எங்கே அன்பு இல்லையோ, அங்கே தவறுகளும் குழப் பங்களும் உண்டாகின்றன;
அன்பே உண்மையாக இருப்பதனால் அன்பு மாறுவ தில்லை;
அன்பு நிறைவானது, அதனால் அது தீங்கு செய்வ தில்லை;
அன்பு என்றும் நிலையானது, அதனால் அது துயர் படுத்துவதில்லை;
அன்பு இறவா நிலையுடையது, அதனால் பிறப்பாலும் இறப்பாலும் அது தாக்கப்படுவதில்லை.
உலகம் எவ்வளவு பொய்த்தோற்றத்தை உடையது!
உலகததிலுள்ள இன்பங்கள் எவ்வளவு விரைவானவை யாகவும வெறுமையாகவும் இருக்கின்றன!
அன்பு எவ்வளவு மெய்ம்மையானது!
உண்மை நிலை எவ்வளவு அமைதி நிறைவானது, உறுதியானது!
மாந்தர்கள் பின்தொடருபவை எவ்வளவு வெறுமை யானவை!