பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வெற்றிமேல் வெற்றி பெற...

4

நாம் விழித்தெழுந்து பார்க்கின்றோம்! நாம் விழித்தெழுந்து விட்டோம் என்று நமக்குத் தெரிகிறது, ஏனெனில் நாம் நல்லனவற்றைக் காண் கிறோம்.

நல்லவற்றின் , ஆற்றலில் நாம் உள்ளோம் என்பதை நாம் அறிகின்றோம், . ஏனெனில் நம்மிடம் உள்ள பல வகையான தீய இச்சைகளும் நம்மைவிட்டு நீங்கியுள்ளன. வேற்றுமையுடனான அடிமைத் தளை அறுந்துள்ளது. நாம் தூய்மையுடன் இணைக்கப்பட்டுள்ளோம்; நேர்மை எனும் உடையை அணிந்து கொண்டுள்ளோம்; அன்பின் புனித ஆற்றலுக்கு நாம் பணிபுரிகின்றோம்; அதனால், நாம் கண்விழித்துக் கொள்கின்றோம்; தீமையிலிருந்து உண்மையே நம்மை விழித்து எழ வைத்தது என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

நாம் ஒளியிலே நடமாடிக் கொண்டு இருப்பதனால் நாம் விடுதலை அடைந்து மகிழ்ச்சியுடன் உள்ளோம்.

அந்த ஒளியில் அனைத்தையும் மிகத் தெளிவாகவே காண்கிறோம்.

மேலும், எந்த வழியில் சென்று கொண்டிருே கின்றோம், எங்குச் செல்கின்றோம் என்பதும் நமக்குப் புலனாகிறது.

ஆனால் நம் இச்சைகள் நம்மை அச்சுறுத்தியபோதும், பகை பலமாக நம்மைப் பற்றிப் பிணைத்துக் கொண்டாலும், இருள் நம்மைச் சூழ்ந்துகொண்ட போதும், தீய கனவுகள்

மைப் பற்றிக் கொண்ட போதும்,