30 வெற்றிமேல் வெற்றி பெற...
அழிந்து போகக் கூடியவற்றில் இன்னமும் இறுகப் பிடித்துக் கொள்ளாமல், நாம் விரைவாகவே அழிவில்லாத தற்குச் சென்று,
பாதுகாப்பெனும் பெரும் பாறையைக் கண்டு கொள் வோம்.
உடல் வளர்ந்து முதுமை பெறுகிறது; ஆற்றல் இழந்து தளர்வடைந்து அழிந்து போகிறது;
பேராசைகள் எரிந்து போகின்றன, கழிவிரக்கத்தின் சாம்பல் மட்டுமே மிஞ்சுகிறது;
இன்பங்கள் நிறைவளிப்பதை நிறுத்திக் கொள்கின்றன; துன்பங்கள் அவற்றின் இடங்களை நிரப்புகின்றன;
ஆனால் உண்மை அழிவற்றது.
உண்மை எக்காலத்திலும் அதிர்ச்சி அடைவதோசுருக்கு வதோ அழிந்து போவதோ இல்லை;
அது எரிந்து போவதுமில்லை, பின்னால் துயரமோ நோக்காட்டையோ விட்டுச் செல்வதில்லை.
அழியக் கூடியவற்றில் மனத்தைப் பதிய வைப்பவர்கள்; கொடிய ஆசைகளினால் விழுங்கப்பட்டவர்கள்; மகிழ்ச்சியற்றும் துன்பம் மிகுந்தும் வாழ்பவர்கள் மீட்கப்படமாட்டார்கள்.
மீட்கப்படுபவர்கள், அழிவற்றவை பற்றிய அறிவு பெற்றிருப்பதாலும் அவர்களிடம் நேர்மை இருப்பதாலும்,
மகிழ்ச்சியுடனும் களிப்புடனும் வ்ாழ்கின்றனர். ஏனெனில், உண்மை எப்போதும் அழகும், ஒளியும் கொண்டுள்ளது.
ஆம்! உண்மை எப்போதும் அமைதி அளிக்கிறது;