பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வெற்றிமேல் வெற்றி பெற.

அவர்களின் செயல்களே அவர்களைக் குற்றம் சாட்டு கின்றன, அதனால் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

நேர்மையானவர்கள் அடடா, எவ்வளவு மகிழ்ச்சியாக வுள்ளனர்!

எல்லா ஆவல்களிலிருந்தும் விடுபட்டுள்ளனர்.

உண்மையுடன் செயல்படும்போது, அவர்கள் முழுமை யான உரிமையுடன் செயல்படுகின்றனர்.

நேர்மை மிக்கவர்கள் எவ்வித அச்சமும் இன்றி இருப்ப வர்கள்!

அவர்களிடம் இருள்படிந்த கெட்ட பண்புகள் இல்லை;

அவர்கள் எந்தத் தீமைக்குமே அஞ்சுவது கிடையாது

தீங்குகள் அவர்களை அச்சுறுத்தும்போது, அவர்கள் எவ்விதக் கலக்கமுமின்றி இருப்பார்கள், அச்சப்படுவதும் இல்லை.

மனத்தினால் ஏற்படக்கூடிய துன்பங்களிலிருந்து காப் பாற்றுவதற்கு உண்மை ஒரு பாதுகாப்புக் கருவி.

பெரும் துயருக்கு எதிர் அரணாக அமைகிறது;

அது, தன்னலம் என்னும் மருட்கையையும் துயரத்தை யும் அழிக்கிறது;

குற்றங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் உண்மையின் ஒளி வெளிப்படுத்துகிறது;

அது, அவற்றினால் ஏற்படும் விளைவுகளையும் வெளிப் படுத்துகின்றது;

தீமைக்கான சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மனத் திலிருந்து நீக்குகின்றது

நேர்மையினால் நிலை நிறுத்தப்படுபவன் பாதுகாப் பினாலும் நிலை நிறுத்தப்படுகிறான்.