த. கோவேந்தன் 58
உண்மையே உண்மையின் பாதுகாப்பு. முன் ஏற்பாடு எதுவுமின்றி அது பாதுகாப்பை அளிக் கிறது.
அது மாறுவேடங்களை நீக்கிவிட்டு, இயற்கையாகவே அமையப் பெற்ற மெய்மையினால், தான்ே பாதுகாப்பை
அதன் வெளிச்சம் எல்லா இருளையும் அகற்றுகிறது.
அது, பொய்யானவற்றைக் காட்டிக் - கொடுத்து, மெய்யானவற்றை வெளிக் கொணர்கிறது.
உண்மையின் முன்னால் குற்ற்ம் வீழ்ச்சியடைகிறது. தற்காப்பிற்கான கருவ அடித்து நொறுக்கப்பட்டு அதன் வாளும் முறிகிறது.
ஆம்! அது கீழே வீழ்ந்துவிட்டது, அதனால் எழ முடியாது.
அது உதவியின்றி இருக்கிறது. போராடும் வீரனோ பாதுகாவலனோ இல்லை. தவறுக்கு முன்னால் உண்மை வீழ்ச்சி அடைவதில்லை. ஆற்றல் உள்ளவர்களை ஆற்றல் அற்றவர்களால் வெற்றி பெற முடியாது.
சிறுமையர் பெருமையரை அடக்க முடியாது. அடிமை ஆண்டைக்குக் கட்டளையிடுவதில்லை. எல்லாமே உண்மைக்குக் கட்டுப்பட்டுள்ளன. நேர்மையானவர்களுக்கு உண்மைதான்் பாதுகாக்கும் கருவி.
துய்மையானவர்களுக்குப் புகலிடமும் அதுவே; அறவாணர்களின்-வழிக்கு ஒளியூட்டுகிறது. வெ-4