த. கோவேந்தன் 59
நீ விழிப்புடன் தேடிக் கொண்டே இருந்ததான்ால் அறிந்து விட்டாய்.
நீ பெற விரும்பியதைப் பெற்று விட்டாய்.
நீ எது வேண்டுமானாலும் கேள், நான் மறுக்க மாட்டேன்.
வழியில் நுழைதல்
மாணவன்: ஆசான்களுக்கு ஆசானே! எனக்குக் கற்பியுங்கள்.
ஆசான் : வினவினால் விடையளிக்கிறேன். நான் பலவற்றைக் கற்றுள்ளேன். ஆனால் இப்போதும் அறிவற்ற நிலையிலே உள்ளேன்;
கல்விச் சாலையில் உள்ள ஏடுகளைக் கற்றேன்; ஆனால் அதன் மூலம் அறிஞன் ஆகவில்லை;
மறை நூல்களையெல்லாம் மனப்பாடம் செய்தேன்; ஆனால் அமைதி என்னிடமிருந்து மறைந்து கொண்டது.
ஆசிரியரே! அறிவு ப்ெறுவதற்கான வழியை எனக்கு அறியச் செய்யுங்கள்;
அமைதியின் வழிக்கு உம் குழந்தையாகிய என்னை அழைத்துச் செல்லுங்கள்.
ஆசான் : மாணவனே! அறிவைத் தெரிந்து, வெறு
வதற்கான வழி, உள்ளத்தைத் தேடுவதன் மூலமே உனக்கு வெளிப்படுகின்றது;
நேர்மையானவர் தம் செயல்களிலே அறிவின் வெகு விதியை நீ அறிந்து கொள்வாய்;