6 வெற்றிமேல் வெற்றி பெற...
நம் கனவில், நாம் தொல்லைகளுக்குட் படுத்தப் பட்டோம், இருந்தும் நம்மை எவராலும எழுப்ப முடிய வில்லை. ஏனெனில், தம்மைப்போல் எல்லோருமே உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் நம் கனவில் ஓர் இடைவெளி ஏற்பட்டது.
தம் கனவு தடுத்து வைக்கப்பட்டுள்ளது; உண்மை நம்முடன் பேசியது, அதை நாம் கேட்டோம்.
ஆஆ. நமது கண்களைத் திறந்து நாம் பார்த்தோம். நாம் அயர்ந்து உறங்கியதால் எதையும் பார்க்க முடிய வில்லை; நாம் உறக்கத்திலிருந்ததனால் எதனையுமே அறியவில்லை.
ஆனால், இப்போது நாம் விழித்து எழுந்துள்ளோம். அதனால் பார்க்கிறோம்.
ஆம்! நமக்குத் தெரிகிறது. நாம் எழுந்திருக்கிறோம் என்று. ஏனெனில் நாம் புனிதத் தன்மையைக் கண்டுள் ளோம்; அதனால் இனிமேல் நாம் தீவினையை விரும்ப மாட்டோம்.
உண்மையை நாம் உற்று நோக்கி உணர்ந்து கொண்டோம். அதனால் நம்மை ஈர்ப்பதிலிருந்து தவறு விடுபட்டது.
ஆம்! நாம் உண்மையைக் கண்டு கொண்டுள்ளோம்!
இரவில் காணும் கனவைப் போலல்லாமல் மெய் யாகவே நமது விழிப்புற்ற கண்களால் காண்கிறோம்.
தொலைவிலேயுள்ள ஓர். அழகான நிலமாகக் கண் டுள்ளோம்.
அதனை அடைந்து நமது உடைமையாக்கும்வரை நாம் தொல்லையுற்று முன்னேறிக்கொண்டே இருப்போம்.
எவ்வளவு மனநிறைவை நமக்கு அளிக்கிறது உண்மை!