இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புனிதச் செயல்கள்
முதலாவது முற்றுணர்தல்
விழிப்பு ஊட்டல்
ஒளியின் மைந்தர்களே! நான் உங்களை வணங்கு கிறேன். 3.
காலை நேர்ப் பிள்ளைகளே! உங்களை நான் வாழ்த்து கிறேன்.
வீணான தூக்கத்தில் உள்ளவர்களைத் தட்டி எழுப்புங்கள், எழுந்திருக்கச் செய்யுங்கள் எழுச்சி பெறத் துரண்டுங்கள்!
காலை வேளையின் வருகையை உங்களுக்கு அறியத் தரும் புதிய நாளின் விடியல். எல்லா உயிரினங்களின் மேலும் விழுகிறது.
பணிவான அந்த அன்பு ஒளி, புனிதமான மலைக்கும்; அமைதியை வெளிப்படுத்தும் நல்ல செய்தித் திரட்டுகளைப் பரப்புகிற்து.
இதுவே, காலை நேரத்தின் வீறார்ந்த மேன்மை.
தீமை பள்ளத்தாக்குகளை விட்டு ஒடி மறைகிறது;
தங்கியிருப்பதற்கு இருளுக்கு இடமே இல்லை;
ஏனெனில், எங்கு வெளிச்சம் உண்டோ அங்கு இருளில்லை;
ாங்கு நன்மை நிலவுகிறதோ, அங்குத் தீமை கலைந்து விடுகிறது;