பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

ஜேம்ஸ் ஆலன்




ஒவ்வொருவரும் தம்மைப் போன்றவனே என்று கற்பனை செய்துகொள்வதும், “சமூகத்தின் பண்பாட்டை” குறித்து உரையாடுவதும் இயல்பார்வம் இல்லோர்க்கு எளிதே. அழுகிய பொருளொன்று தலைமுறை தலைமுறையாக இருந்து வரக் கூடுமென்ற நிலையில் இருக்கின்றது இது. ஏனெனின், காமாலைக் கண்னுக்கு காணும் ஒவ்வொன்றும் மஞ்சளாகவே தோன்றுமன்றோ? மனித சமூகக் கட்டமைப்பில் கண நேர நன்மை எதையுமே காணமுடியாத மக்கள் தம்மைத் தாமே பழுதுபார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு இல்லத்தை அடுத்தே இருக்கின்றது. அவர்கள் தீமையை நன்மையென அழைப்பர். நன்மையைக் காணுதல் இயலாது போகும் வரையில் அவர்கள் குற்றங்காணும் குணத்துடனும், சிடுசிடுப்புடனும் தீமையின் கண்ணேயே வதிந்து வந்துள்ளனர். ஒவ்வொன்றும் தீயதாகவே தோன்றுகின்றது. மக்களும் தீயராகவே தோன்றுகின்றனர்.

முழுக்க முழுக்கத் தன்னலக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் சமூகப் பணியில் பங்குகொள்ளும் மனிதன், நீடித்துச் செழிப்புற இயலாமலும், செல்வாக்குடையவன் என்ற முறையில் எந்த இடத்தையும் நிரப்ப இயலாமலும் போய்விடுகிறான். விரைவில் அவனுடைய திரை விலக்கப்பட்டு அவன் அவமதிக்கப்படுகின்றான். குறிப்பிட்ட காலத்திற்கேனும் அத்தகைய மனிதன் மனித ஏமாளித்தனத்தால் தின்று கொழுக்க இயலும் எனும் உண்மை மனிதரின் அறிவின்மையை எடுத்துக் காட்டினும் மனிதரின் நம்பிக்கைப்பான்மையையும் எடுத்துக் காட்டுகின்றது.