பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

ஜேம்ஸ் ஆலன்


பெற்று விடுகின்ற அளவிற்கு அதன் ஆதரிப்புச் ஆற்றல் அத்துணை மேம்பட்டதாக இருக்கின்றது. அதன் சுவர்கள் பொடிந்து விழுவதில்லை; அதன் உத்திரங்கள் உரங்கெடுவதில்லை. அதன் கூரை கீழே வீழ்ந்து விடுவதில்லை. மனிதன் வாழுகின்ற போது அது நிலைத்து நிற்கும். அவன் மறைந்த பின்னரும் பல தலைமுறைகள் பிறர்க்குத் தஞ்சமும், அடைக்கலமும் தொடர்ந்து அளித்துக்கொண்டே வரும்.