பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

229

வெறும் அரசியல் நிலைகளில், அஃதாவது பதவிப் போராட்டப் போட்டிகளில் இவை இருப்பது போலவே, விடுதலைப் போராட்ட முயற்சிகளிலும் இருப்பது, இவ்வினத்தை என்றுமே ஈடேற்றாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதியாக நெஞ்சில் இருத்திக் கொள்ளவேண்டும். இங்கு இன்னொன்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சில பொதுக்குற்றங்களை நம்மில் ஒருவர் நம் இனநலம் பற்றிக் குறிப்பிடுகையில், நாம் ஒவ்வொருவரும் அக் குற்றம் நம்மிடம் இல்லாதது போலவும் பிறரிடம் இருப்பது போலவுமே கருதிக் கொள்கிறோம். ஏனெனில் பொதுமாந்த மனவியல்பு அப்படி. ஆனால், நம் போல் உண்மையிலேயே பொது நலம் கருதுபவர்கள் அப்படிக் கருதிக் கொள்வது கூடாது. இங்கு உண்மையல்லாதவரும் உண்மையுள்ளவர் போல் நடிக்கின்றனர். உண்மையுள்ளவரும் உண்மையில்லாதவர் போல் பிறர் கருதுமாறு இயல்பாகவே நடக்கின்றனர். பெரும்பாலும் போலிகளுக்கே நடிக்க முடிகிறது. உண்மைகள் நடிக்க இயல்வதில்லை. எனவே நிலைகள் தடுமாறிப் போகின்றன. விளைவுகள் தலைமாறிப்போகின்றன.

நம் விடுதலைப் போராட்ட முயற்சிகளிலும் சில நிலைகள் இப்படித்தான் உள்ளன. ஆனாலும் எப்படியோ அம் முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாராட்டவும், ஊக்கவுமே செய்கிறோம். என்றாலும், நம் பாராட்டும், ஆதரவும் ஊக்கமும் முழுவதும் பயன்படாத வகையிலும், அல்லது வீணாகிப் போகும் அளவிலும் அப்போராட்ட இயக்கங்கள் தங்களுக்குள்ளேயே பொருதிக்கொள்ளும் பொழுது நாம் என்ன செய்ய முடியும்?

நாம் அனைவரும் நமக்கென ஒருபொது எதிரி, வரலாற்றுப் பகைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்கவே கூடாது. அத்துடன் நமக்குள் பல வேறுபாடுகள் இருந்தாலும் சிறப்பான பொதுவான ஒரு நோக்கம் இருக்கின்றது. என்பதையும் நாம் மறந்துலிடவே கூடாது. ஆனால், இதை நாம் எங்கே செய்கிறோம்? நேர்மை பேசும், பொதுநலம் உண்மையாகக் கருதும் அனைவரும் பொழுதுதேனும் எண்ணிப் பார்க்கவே வேண்டும் இதுவரை (நம் மனச்சான்றின் பார்வையுடன் சொல்லுங்கள்) நாம் எண்ணிப்பார்த்தோமா? அல்லது இனியாவது எண்ணிப் பார்ப்போமா? எவ்வாறு எண்ணிப் பார்க்கின்ற அன்றுதான் நம் முயற்சிகள் வலுப்பெற முடியும். அதுவரை நம்