இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆழ்வார்கள் பன்னிருவர். எம்பெருமானின் திருக்குணங்களில் ஆழங்கால்பட்டுத் தம்மை மறந்த நிலையில் இருந்தமையால் 'ஆழ்வார்கள்' என்ற திருப்பெயரைப் பெற்றுத் திகழ்ந்தனர். இதனைக் கவிஞர் நாரா. நாச்சியப்பன்,
- அண்ணலை மேக வண்ணன்
- ஆகிய பெருமாள் தன்னை
- எண்ணியே நாளும் நெஞ்சில்
- இருத்தியே அன்பில் ஆழ்ந்து
- நண்ணியே நின்ற தாலே
- நல்முற ஆழ்வார் என்று
- திண்ணமாய்ப் போற்றப் பெற்றார்
- செல்வர்பன் னிருவர் தாமே.[1]
- அண்ணலை மேக வண்ணன்
என்று கூறுவார். இவர்கள் வரலாற்றைக் கால வரலாற்றின்படி ஈண்டுக் கூறுவேன்.
(1-3). முதலாழ்வார்கள் : இவர்கள் பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற திருப்பெயரினர் மூவர். இவர்கள் மூவரும் அயோநிஜர்களாய் (யோநி வழிப் பிறவாதவர்களாய்) ஒர் ஐப்பசித் திங்களில் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர் என்பது குருபரம்பரைச் செய்தி. அதாவது பொய்கையார்
- ↑ ஆழ்வார்களின் ஆராஅமுது (கழகம்); சிறப்புப் பாயிரமாலை-1