பக்கம்:வைணமும் தமிழும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

89



இந்நிலையில் குரல் கொடுக்காமால் உள்ளே நுழைவதற்கு இசைவும் பெறாமல், நான்காவதாக யாரோ ஒருவர் நுழைந்து விடுகின்றார். நெருக்கத்தினால் இது தெரிகின்றது. இந்தப் புதியவரைத் தெரிந்து கொள்ள அந்த இருட்டிலும் மழையிலும் விளக்கு கிடைக்கவில்லை. பொய்கையாழ்வார் ஒரு விளக்கேற்றுகின்றார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யான்அடிக்கே குட்டினேன் சொல்மாலை
இடராழி நீக்குகவே என்று.[1]

என்பதுதான் அந்த விளக்கு. உலகத்தை அகலாகவும், கடலை நெய்யாகவும், கதிரவனைத்திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி விடுகின்றார். இந்தப் பாசுரத்தின் மகிமையால் அந்த இடைகழியில் 'பளிச்' என்ற ஏதோ ஒரு திரை விலகி எப்படியோ ஒளியும் வந்து விடுகின்றது. புறத்தே கவிழ்ந்துகிடந்த இருளும் நீங்கி விடுகின்றது. அதே சமயத்தில் பூதத்தாழ்வாரும் ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்(கு) ஏற்றினேன், நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். [2]

அன்பை அகலாகவும்,பொங்கிவரும் ஆர்வத்தை நெய்யாகவும், சிந்தையைத் திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்று


  1. முதல் திருவந்1
  2. இரண்-திருவந்.1