இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
142
வைணவமும் தமிழும்
- நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள்
- தாமார் நம்மைத் தனித்தழைத்து- நீமாறன்
- செந்தமிழ்வே தத்தின் செழும்பொருளை நாளுமிங்கு
- வந்துரையென் றேவுவதே வாய்ந்து.
என்ற அப்பெரியாரின் திருவாக்காலும் அறியலாம்.
மாமுனிகளும் இறைவன் இட்டகட்டளையைத் தலை மேற்கொண்டு அப்படியே தொடங்கி நடத்தி வரலாயினர். பெரிய பெருமாளும், திருவாய்மொழியின் முதற் பாசுரம் முதல் இறுதிப் பாசுரம் முடியவுள்ள திருப்பாசுரங்கட்கு இவர்தம் விளக்கத்தைக் கேட்டருளி மிகவும் மனம் உவந்து 'முப்பத்தாறாயிரப் பெருக்கர்’ என்ற திருநாமத்தையும் இவருக்குச் சாற்றியருளினார் என்பது வரலாறு. இவ்வரலாற்றாலும் மற்றும் பல காரணங்களாலும் இவ்வியாக்கியானம் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும் திருவாய்மொழியினைப் போன்றே ஆராஅமுதமாய் இன்பமாரியாய், எங்ஙனே சொல்லினும் இன்பம் பயப்பதாய் இருப்பது என்பதற்குத் தட்டில்லை.