வீடு பெற்றிற்குரிய வழிகள்
28
“சேவிபக்கல் சேஷபூதன் இழியும்
துறை, பிரஜை மூலையிலே வாய்
வைக்குமாப் போலே” (முமுட்சு-14)
[சேஷி தலைன், சேஷபூதன் சேதநன்; பிரஜை-குழவி]
என்ற முமுட்சுப்படியின் வாக்கியத்தையும் நோக்கலாம். பால் பருகும் பச்சைக்குழவி எங்ஙனம் தாயினுடைய மற்ற அவயங்கள் யாவையும் விட்டுத் தான் உயிர் வாழ்வதற்கிடனாய் உள்ள அவள் கொங்கையிலே வாய் வைக்கின்றதோ, அங்ஙனமே சேவியாகின்ற எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டு, தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடி களையே சீவன் பற்றுகின்றான் என்பதை இந்த வாக்கியம் அழகாகப் புலப்படுத்துவதை அறியலாம். முந்திய செயல் எவ்வாறு குழந்தைக்கு இயல்பாய் அமைந்ததோ, அவ்வாறே பிந்திய செயலும் சேதநனின் சொரூபத்திற்கு இயல்பாய் அமைந்துள்ளது என்பதைத் தெளியலாம். மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பரத்துவம், வியூகம், விபவம், அந்தயாமித்துவம் அர்ச்சை, என்னும் இறைவனுடைய ஐந்து நிலைகளையும் உள்ளங்கை நெல்லி போன்று கண்டவர்கள், இந்த ஐந்து நிலைகளிலும் காக்கும் இயல்பினதும், அடையத் தக்கதும், எல்லாத் திருக்குணங்களும நிறைந்ததுமான இடம் அர்ச்சாவதாரமே என்று தெளிந்தவர்கள். இவர்கள் “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்வ தற்குப்” (திருவாய் 33;1) பதறிப் பலகாலும் பிரபத்தி பண்ணுகின்ற அளவில், பல இடங்களிலும் அர்ச்சாவதாரத்தில்தான் பிரபத்தி செய்தனர் என்பதை மேலே கண்டோம்.