பக்கம்:வைணமும் தமிழும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

வைணவமும் தமிழும்


        “ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும்
        அர்ச்சாவதாரங்களிலே” (gவசபூஷ38)

என்பது ஸ்ரீவசனபூஷண வாக்கியம் முமுட்சுப்படியிலும்,

          "இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள்
          போலன்றிக் கண்ணாலே காணலாம்படி இருக்கும்

(முமுட்சு-140)

என்று இவ்வவதாரத்தின் எளிமை பேசப்பெறுகின்றது.

பகவானை உபாயமாகப் பற்றுமிடத்தில் வேண்டப் பெறும் குணங்கள் வாத்சல்யம்’, ‘சுவாமித்துவம்’,'செளசீல்யம்’, செளலப்பியம் என்பவையாகும். இவற்றுள் வாத்சல்யம்’ என்பது கன்றினிடத்துப் பசு இருக்கும் இருப்பு. சுவாமித்வம் என்பது உடையவனாயிருக்கும் இருப்பு:செளசீல்யம் என்பது உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை. செளல்ப்பியம் என்பது எளியனாயிருக்கும் இருப்பு. இந்தத் திருக்குணங்கள் “இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே” (யூரீவச்பூஷ-40) என்று ஸ்ரீவசனபூஷணம் குறிப்பிடுகின்றது. இதனால்தான் பிரபந்நர்களின் தலைவரான சடகோபர் அர்ச்சாவதராங்களில் இன்று மிகப்பெரும்புகழுடன் திகழும் திருவேங்கடமுடையானிடம் சரண்புகுகின்றார்.

          ‘அகலகில்லேன் இறையும்'என்று
              அலர்மேல் மங்கை உறைமார்பா
          நிகரில்புகழாய் உலகம் மூன்று
              உடையாய்! என்னை ஆள்வானே!