282
வைணவமும் தமிழும்
“ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும்
அர்ச்சாவதாரங்களிலே” (gவசபூஷ38)
என்பது ஸ்ரீவசனபூஷண வாக்கியம் முமுட்சுப்படியிலும்,
"இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள்
போலன்றிக் கண்ணாலே காணலாம்படி இருக்கும்”
(முமுட்சு-140)
என்று இவ்வவதாரத்தின் எளிமை பேசப்பெறுகின்றது.
பகவானை உபாயமாகப் பற்றுமிடத்தில் வேண்டப் பெறும் குணங்கள் வாத்சல்யம்’, ‘சுவாமித்துவம்’,'செளசீல்யம்’, செளலப்பியம் என்பவையாகும். இவற்றுள் வாத்சல்யம்’ என்பது கன்றினிடத்துப் பசு இருக்கும் இருப்பு. சுவாமித்வம் என்பது உடையவனாயிருக்கும் இருப்பு:செளசீல்யம் என்பது உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை. செளல்ப்பியம் என்பது எளியனாயிருக்கும் இருப்பு. இந்தத் திருக்குணங்கள் “இருட்டறையில் விளக்குப் போலே பிரகாசிப்பது இங்கே” (யூரீவச்பூஷ-40) என்று ஸ்ரீவசனபூஷணம் குறிப்பிடுகின்றது. இதனால்தான் பிரபந்நர்களின் தலைவரான சடகோபர் அர்ச்சாவதராங்களில் இன்று மிகப்பெரும்புகழுடன் திகழும் திருவேங்கடமுடையானிடம் சரண்புகுகின்றார்.
‘அகலகில்லேன் இறையும்'என்று
அலர்மேல் மங்கை உறைமார்பா
நிகரில்புகழாய் உலகம் மூன்று
உடையாய்! என்னை ஆள்வானே!