பக்கம்:வைணமும் தமிழும்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

வைணவமும் தமிழும்



(iv). நிதி படைத்தவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும்; எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் அறிஞர்களால் புகழப்பெறுவர்.

(v). நிதியை இழந்தவன் கதறியழுவன்; எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. சீராமனாகிய வைத்தமாநிதியை இழந்த பரதாழ்வான் சபையில் கதறிஅழுதானன்றோ? "பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி, அழுதேன்" (முதல்.திருவந்: 16) “இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவிநில்லாதே” (பெரு திரு 7: 4) "எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே" (பெருதிரு.7;7) "உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி அழுவன்” (திருவாய் 5.8:4), “என் சொல்லிப் புலம்புவனே?” (திருவிருத். 86) என்று இப்படியெல்லாம் கதறியழுவார்கள். எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப்பொழுது கழியப் பெற்றதும் கள்வர் எல்லாச் சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படிக் கதறியழக் கூடுமோ அப்படிக் கதறி அழ வேண்டும் என்பர்.