24
வைணவமும் தமிழும்
இன்பத்தோடு வாழும் உலகு 'முக்தி உலகு'. இதனை 'நித்திய விபூதி' என்பர். இவ்வாறு கூறுவது வைணவமரபு. இருவகை உலகிற்கும் தலைவன் திருமாலே என்பதைக் குறிக்கத் திருமாலை ‘உபயவிபூதி நாதன்' என்பர் ஆன்றோர்.
- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி'
- பகவன் முதற்றே உலகு (1)
- மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
- தாஅய தெல்லாம் ஒருங்கு (610)
எனும் இருகுறள்களால் இவ்வுலகிற்கு அவன் தலைவன் என்பதனை விளக்கினார்.
- தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
- தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய '(முக்தி) உலகு' எனக் குறித்தலால் 'அந்தமில் இன்பத்து அழிவில்வீடு’, ‘நலம் அந்தம் இல்லதோர் நாடு’, ‘வானோர்க்குயர்ந்த உலகு' என்றெல்லாம் ஆழ்வார்கள் சிறப்பித்துக் கூறும் நித்திய விபூதிக்கும் திருமாலே தலைவன் என்பதைக் கூறினர். எனவே ‘உபயவிபூதிநாதன்' திருமாலே என உறுதி செய்தாராயிற்று.
இம்முக்தியுலகிற் சென்றவரை 'புனை கொடுக்கிலும் போக ஒட்டார்' என்றபடி அவ்வுலகிலேயே நிலைபெறுவாரன்றி ஈண்டுத் திரும்பிவாரர் என்பது வைணவ சமயக் கோட்பாடு. இதனை
- கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
- மற்றீண்டு வாரா நெறி (356)
என்று விளக்கினார் என்பது சிந்திக்கத்தக்கது.