இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வைணவமும் தமிழும்
27
மதிப்படைந்து சீவிக்கும்படியாயிருக்குமென்று வைத்துக் கொள்வோம்; அதையும் பொறாதே அப்படிப்பட்ட விசாரிப்பும் செய்யார்கள் என்று 'என்னே என்பாரும் இல்லை’ என்பதற்கு இது சுவைமிக்க பொருள்.
- (ஈ) திரிகடுகம் : இந்நூலை இயற்றியவர் நல்லாதனார்.
- கண்ணகன் ஞாலம் அளந்ததுஉம் காமருசீர்த்
- தண்ணறும் பூங்குருதம் சாய்த்ததுஉம்-நண்ணிய
- மானச் சகடம் உதைத்தது உம் இம்மூன்றும்
- பூவைப்பூ வண்ணன் அடி.
இஃது இந்நூல் காப்பாக வந்த பாடல். திருமால் திரிவிக்கிரமனாக ஞாலம் அளந்த வரலாறும், கண்ணனாக அவதரித்தபோது குருந்தம் சாய்த்தது, சகடம் உதைத்தது என்ற இரண்டு நிகழ்ச்சிகளும் இதில் குறிப்பிடப் பெற்றுள்ளன.
- (உ) நான்மணிக் கடிகை : இதன் ஆசிரியர் விளம்பி நாயனார் என்ற நல்லிசைப் புலவர்.
- மதிமன்னு மாயவன் வான்முகம் ஒக்கும்;
- கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
- முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
- எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும்; பூவைப்
- புதுமலர் ஒக்கும் நிறம்.
இஃது இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல், மாயவன் வியக்கத்தக்க ஆற்றலுடைய திருமால் சக்கரப் படை அவன் திருக்கண்களுக்கும் பூவை மலர் அவன் நிறத்திற்கும் உவமையாக வந்தன.